Difference between revisions 13975 and 13990 on tawikiquote


==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
* அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
* அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அக்காளைப் பழித்து தங்கச்சி மோசம் போனாள்.
* அக்காளோடு போயிற்று அத்தான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* [[அடக்கம்]] உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடியாத மாடு படியாது.
* அடிக்கிற கைதான் அணைக்கும்!
(contracted; show full)* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அரிவாளாம்!
* அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
* அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
* அற்ப 
[[ஆசை]] கோடி தவத்தைக் கெடுக்கும்.
* அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அற்றது பற்றெனில் உற்றது வீடு.
* அனுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்
:*<small>ஒருவன் செய்த தீவினைகளின் (பாவங்களின்) விளைவுகளை அனுபவித்து அவை நீங்கப்பெற்றால்தான்/ஒருவன் தன் வக்கிரமமான, இயற்கைக்குப் புறம்பான, காமவெறிச்செயல்களை விட்டொழித்தால்தான், எந்நோய்க்கும் உட்கொள்ளும் மருந்துகள் வேலைசெய்து நற்பலனளிக்கும் என்பது அர்த்தமாகும்</small>
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
* அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
* அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
* அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
*  அடுக்களை குற்றம் சோறு குழைந்தது
* அளந்த வ்ல்லம் அட்டாலியிலே
* அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது.

==ஆ==
* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
* பொறுமை மிக அவசியம்
* ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* [[ஆசை]] அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* [[ஆசை]] இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
* [[ஆசை]] உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* [[ஆசை]] வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools.
* ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!
* ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?
* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
* ஆடிப் பட்டம் தேடி விதை.
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
(contracted; show full)* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
* ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
* ஆனைப் பசிக்கு சோளப் பொரி
* ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
* ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
* ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
* 
[[ஆசை]] இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
* [[ஆசை]]க்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
* ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
* ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
* ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா?

==இ==

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
(contracted; show full)*  உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம். 
*  உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது.
*  உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
*  உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
*  உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
*  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
*  உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
*  உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு 
[[ஆசை]]ப்பட்டானாம்!
*  உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
*  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? 
*  உரம் ஏற்றி உழவு செய்
*  உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
*  உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
*  உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
*  உலோபிக்கு இரட்டை செலவு.
(contracted; show full)* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐப்பசி அடை மழை.
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஐம்பதிலும் 
[[ஆசை]] வரும்

==ஒ==
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே!
:*<small>ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.</small>
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
(contracted; show full)* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

==க==

* கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட 
[[ஆசை]]யுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
* கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது!
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
(contracted; show full)* களவும் கற்று மர
( இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி)
* களவும் கத்தும் மற
:*களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள்.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் குடித்த குரங்கு போல ...
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள 
[[மனம்]] துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.
* கள்ளுக்கும் காமத்துக்கும் கண்ணில்லை!
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
* கடமை கண் போன்றது
* கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார்

==கா==

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்.
* காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம்.
* காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி [[ஆசை]] கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.
* காகம் திட்டி மாடு சாகாது.
* காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்.
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.
* காகிதப்பூ மணக்காது.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..
* காரண குருவே காரிய குரு!
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும் ?
* காலமும் கடல் அலையும் எவருக்கும் காத்திரா.
* காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
* காலம் பொன் போன்றது 
* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
* காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்! 
* காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
* காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம்.
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலைக் கல்; மாலைப் புல்.
:*(<small>"காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது [[மனம்]] அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (<small>'''[http://dinamani.com காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012]''(contracted; show full)==கூ==
* கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
* கூத்தாடி பெண்ணுக்கு சூதாடி கணவன்
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் 
[[ஆசை]], மீசைக்கும் [[ஆசை]].
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூழானாலும் குளித்துக் குடி.
* கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்.
* கூடாநட்பு கேட்டில் முடியும்.
* கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?)

==கெ==
(contracted; show full)* கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது
* கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார்.

==ச==
* சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
:<small> சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், 
[[உண்மை]]யில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி</small>
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை!
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
(contracted; show full)* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
* செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?
* செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.
* செல்லுமிடம் சினம் காக்க.
* செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
* செய்தவன் 
[[மனம்]] குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
* செய்யும் தொழிலே தெய்வம்.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

==சே==
* சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
* சேலை கட்டிய மாதரை நம்பாதே !
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
(contracted; show full)
* தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்.
* தாய்க்குப்பின் தாரம்.
* தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று.
* தாயில்லா தகப்பன் தாயாதி.
:*<small> தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் 
[[உண்மை]]யாகும் </small>
* தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
* தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
* தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
* தாயோடு அறுசுவை உணவு போம்.
* தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல.
* தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு.
* தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.
(contracted; show full)* பெண்ணுக்கு இடம் கொடேல்.
* பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!!
* பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்....
* பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்
* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
* பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற 
[[மனம்]] பித்து பிள்ளை [[மனம்]] கல்லு.
* பெற்றால் தான் பிள்ளையா?
* பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு.
* பெண்ணும் போதை தரும், கள்ளும் போதை தரும் இதற்கு தான் நாம் பெண்கள் என்று கூறுகிறோம்
:*<small>புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்...</small>

(contracted; show full)* மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
* மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல.
* மவுனம் கலக நாசம்
* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
* மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
* மனமுரண்டிற்கு மருந்தில்லை.
* 
[[மனம்]] உண்டானால் இடம் உண்டு.
* [[மனம்]] இருந்தால் மார்க்கமும் உண்டு.
* [[மனம்]] தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
* [[மனம்]] போல வாழ்வு.
* மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்!
:*<small>அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது...</small>
* மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
* மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை.
(contracted; show full)* முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!
* முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு?
* முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
* முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல.
* முகத்துக்கு முகம் கண்ணாடி
* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
* முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா?
* முடவன் கொம்புத் தேனுக்கு 
[[ஆசை]]ப் பட்டாற்போல!..
* முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.
* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
* முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது.
* முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.
* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
* முதல் கோணல் முற்றுங் கோணல்
* முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
(contracted; show full)* மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
* மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்
==மொ==
* மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல!
* மொழி தப்பினவன் வழி தப்பினவன்

==மோ==
* மோகம் முப்பது நாள், 
[[ஆசை]] அறுபது நாள்.
* மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.
* மெளனம் மலையைச் சாதிக்கும்.

==ய==
*யதார்த்தவாதி வெகுசன விரோதி.
:*உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத '''விரோதி''' போலாகிறான் என்பது கருத்து.

==யா==
* யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.
* யானைப் பசிக்கு சோளப் பொரி.
* யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

==யோ==
* யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.


==ரா==

* ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.
* ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி.

==வ==
* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
* வட்டி [[ஆசை]] முதலுக்கு கேடு.
* வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
* வடக்கே கருத்தால் மழை வரும்.
* வண்ணானுக்கு  வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.
* வணங்கின முள் பிழைக்கும்.
* வணங்குன புல்லு தைக்கும்.
* வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான்.
* வந்த விதி  வந்தால் வாய் திறக்க  வழியிருக்காது!
(contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]