Difference between revisions 14819 and 14971 on tawikiquote

Semippu

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
(contracted; show full)
* தாயில்லா தகப்பன் தாயாதி.
:*<small> தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் [[உண்மை]]யாகும் </small>
* தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
* தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
* தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.

* தாயை கொன்னவனுக்கும், நியாயத்தை சொல்றதுக்கு ஐம்பது பேரு இருப்பான்
* தாயோடு அறுசுவை உணவு போம்.
* தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல.
* தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு.
* தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார்.
* தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
* தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
* தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும்.
* தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பான்!
(contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]