Difference between revisions 23234 and 25016 on tawikiquote

ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும்

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
(contracted; show full)* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐப்பசி அடை மழை.
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஐம்பதிலும் [[ஆசை]] வரும்

==ஒ==

* ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை.
* ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம்
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே!
:*<small>ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.</small>
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.
* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
(contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]
நேர்மையே உயரிய ளொள்கை