Difference between revisions 29602 and 29603 on tawikiquote

ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும்

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
(contracted; show full)* ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை.
* ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய்.
* ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா!
* ஏறாத வார்த்தை வசமாகுமா?
* ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும்.
* ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல.
* ஏறா மேடும் பாயாத் தண்ணீரும்.
* ஏறாலக்கமாய்ப் பேசுகிறாய்.

* ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும்.
* ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.

==ஐ==

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
(contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]
நேர்மையே உயரிய ளொள்கை