Difference between revisions 29615 and 29616 on tawikiquote

ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும்

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
(contracted; show full)* ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம்.
* ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே.
* ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி.
* ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே?
* ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
* ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம்.
* ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை.
* ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.

* ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை.

==ஐ==

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
(contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]
நேர்மையே உயரிய ளொள்கை