Difference between revisions 1189174 and 1189177 on tawiki

{{cleanup}}

'''திருவாலி, திருநகரி''' இரண்டும் சேர்ந்து ஒரு [[திவ்ய தேசம்|திவ்ய தேசமாகும்]]. ஒன்றுக்கொன்று சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும் இரண்டும் சேர்ந்தே ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இத்திருத்தலம் [[சீர்காழி]]யிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.

== அமைந்துள்ள இடம் ==
இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.

== மூலவர் ==
அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகம் 

== தாயார் ==
பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி) 

== தீர்த்தம் ==
இலாட்சணி புஷ்கரிணி

==தல மரம்==
வில்வம் 

== விமானம் ==
அஷ்டாசர விமானம் 

==தல வரலாறு== 

திருமால் [[நரசிம்மர்|நரசிம்ம அவதாரம்]] எடுத்த போது [[இரணியன்|இரண்யனை]] வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், முனிவர்களும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் அமர, தேவியைப் பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே பெருமாள் திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தமையால், இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி என ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பகுதியை (ஆலிநாடு) ஆண்ட மன்னனுக்கு ([[திருமங்கை ஆழ்வார்]]) "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.

==சிறப்பம்சம்==
*[[பத்ரிநாத் கோயில்|பத்ரிகாசிரமத்திற்கு]] அடுத்ததாகப் பெருமாள் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிநாத்துக்கு இணையானது. 
*லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.
*திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

== மங்களாசாசனம் ==
குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார் 

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் <br>
புகுந்ததன்பின் வணங்கும் என் <br>
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே <br>
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந் <br>
தளிர்கள் கலந்து அவை எங்கும் <br>
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே  <br>

[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]