Revision 6276 of "தமிழ்ப் பழமொழிகள்" on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடியாத மாடு படியாது.
* அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
* அரசு அன்று கொல்லும்,
தெய்வம் நின்று கொல்லும்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
* அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
* அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
* அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
* அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
* அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
* அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
* அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்
திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
* அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
* அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
* அழச் சொல்லுவார் தமர்,
சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

* அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
* அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
* அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
* அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
* அறச் செட்டு முழு நட்டம்.
* அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
* அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
* அறிய அறியக் கெடுவார் உண்டா?
* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
* அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

* அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
* அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
* அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
* அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* அற்றது பற்றெனில் உற்றது வீடு.
* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
* அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.

* அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

==ஆ==
* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
* ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* ஆசை வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
* ஆடிப் பட்டம் தேடி விதை.
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
* ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
* ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
** இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
* 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
** மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்
* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
* ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
* ஆழமறியாமல் காலை இடாதே.
* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

* ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
* ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

==இ, ஈ==

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
* இஞ்சி இலாபம் மஞ்சளில்.
* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
* இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
* இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
* இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
* இராச திசையில் கெட்டவணுமில்லை
* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
* இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
* இருவர் நட்பு ஒருவர் பொறை.
* இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
* இல்லது வாராது; உள்ளது போகாது.
* இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
* இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இளங்கன்று பயமறியாது
* இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
* இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
* இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல. 
* இறங்கு பொழுதில் மருந்து குடி.
* இறுகினால் களி , இளகினால் கூழ்.
* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
* ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
* ஈர நாவிற்கு எலும்பில்லை.
* ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

==உ,  ஊ==

* உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
* உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
* உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
* உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
* உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
* உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
* உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
* உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
* உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
* உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
* உரம் ஏற்றி உழவு செய்
* உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
* உலோபிக்கு இரட்டை செலவு.
* உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
* உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
* உளவு இல்லாமல் களவு இல்லை.
* உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
* உள்ளது போகாது இல்லது வாராது.
* உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
* உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
* ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
* ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
* ஊண் அற்றபோது உடலற்றது.
* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

==எ, ஏ==

* எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்! 
* எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
* எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது! 
* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
* எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
* எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
* எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
* எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
* எதார்த்தவாதி வெகுசன விரோதி.
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
* எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
* எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
* எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
* எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
* எலி அழுதால் பூனை விடுமா?
* எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
* எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
* எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
* எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
* எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
* எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
* எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்! 
* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
* எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
* எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
* எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
* எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
* எறும்புந் தன் கையால் எண் சாண்
* ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
* ஏரி நிறைந்தால் கரை கசியும்.
* ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
* ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
* ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
* ஏழை என்றால் எவர்க்கும் எளிது
* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
* ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

==ஐ, ஒ, ஓ, ஒள==

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
* ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
* ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
* ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
* ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
* ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
* ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
* ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
*ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
* ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
* ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

==க==

* கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
* கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
* கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

* கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.

* கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
* கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
* கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
* கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
* கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
* கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை! 
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
* கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.

* கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
* கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
* கரணம் தப்பினால் மரணம்.
* கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
* கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

* கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
* கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
* கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
* கல்லாதவரே கண்ணில்லாதவர்.
* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
* கல்வி அழகே அழகு.
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

* கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
* களவும் கற்று மர
** இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி
* களவும் கத்தும் மற
** களவையும் சூதாட்டத்தையும் மற
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

==கா==

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
* காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காரண குருவே காரிய குரு!
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
* காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்! 
* காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலைக் கல்; மாலைப் புல்
**"காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (<small>'''[http://dinamani.com காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012]'''</small>)
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
* காற்றில்லாமல் தூசி பறக்குமா?
* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

==கி, கீ==
* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! 
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
==கி, கீ, கு, கூ==
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
* பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல

==கெ==

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டி செட்டியே, 
கிழிந்தாலும் பட்டு பட்டே.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
* கெட்டும் பட்டணம் சேர்
* கெண்டையைப் போட்டு வராலை இழு.
* கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
* கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

==கே==
* கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
* கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!

* கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
* கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
* கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
* கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

==கை==

* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
* கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
* கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் 
* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
* கையிலே காசு வாயிலே தோசை
* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
* கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
* கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

==கொ==
* கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
* கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
* கொடிக்கு காய் கனமா?
* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
* கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
* கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
* கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
* கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
* கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

==கோ==

* கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
* கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
* கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
* கோடி வித்தையும் கூழுக்குத்தான்
* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
* கோபம் சண்டாளம்.
* கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
* கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
* கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
* கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
* கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
* கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது

==ச, சா, சி, சீ==
* சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
* சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
* சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
* சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
* சாண் ஏற முழம் சறுக்கிறது.
* சாது மிரண்டால் காடு கொள்ளாது.
* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
* சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
* சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்
* சித்திரையில் செல்வ மழை.
* சிறுதுளி பெரு வெள்ளம்.

==சு, சூ==

* சுக துக்கம் சுழல் சக்கரம்.
* சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
* சுட்ட சட்டி அறியுமா சுவை.
* சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
* சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
* சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
* சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
* சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
* சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
* சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

==செ, சே, சை==

* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
* செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
* செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
* செயவன திருந்தச் செய்.
* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
* செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.
* செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
* சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
* சேற்றிலே செந்தாமரை போல.
* சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

==சொ, சோ==

* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
* சொல் அம்போ வில் அம்போ?
* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
* சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
* சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
* சொல்வல்லவனை வெல்லல் அரிது.
* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.


==த==

* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
* தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
*தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
* தவளை தன் வாயாற் கெடும்.
* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
* தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!

==தா==
*தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
*தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
*தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
*தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
*தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
*தானத்தில் சிறந்தது நிதானம்
*தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்
==தி==
* திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை

==து==
* துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
* துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை
==தை==
* தை பிறந்தால் வழி பிறக்கும்
* தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்

==ந==

* நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
* நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
* நடந்தவன் காலிலே சீதேவி இருந்தவன் காலிலே மூதேவி
* நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
* நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
* நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
* நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
* நயத்திலாகிறது பயத்திலாகாது.
* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
* நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
* நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
* நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
* நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
* நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

==நா==

* நா அசைய நாடு அசையும்.
* நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
* நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
* நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
* நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
* நாய் இருக்கிற சண்டை உண்டு.
* நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.
* நாய் விற்ற காசு குரைக்குமா?
* நாலாறு கூடினால் பாலாறு.
* நாள் செய்வது நல்லார் செய்யார்.
* நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.

==நி, நீ==

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
* நித்திய கண்டம் பூரண ஆயிசு.
* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
* நித்திரை சுகம் அறியாது.
* நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
* நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
* நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
* நீர் மேல் எழுத்து போல்.
* நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.


==நு, நூ, நெ, நே, நை, நொ, நோ==

* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
* நூல் கற்றவனே மேலவன்.
* நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
* நூற்றைக் கொடுத்தது குறுணி.
* நெய் முந்தியோ திரி முந்தியோ.
* நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
* நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
* நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
* நேற்று உள்ளார் இன்று இல்லை.
* நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
* நொறுங்கத் தின்றால் நூறு வயது.
* நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
* நோய் கொண்டார் பேய் கொண்டார்.
* நோய்க்கு இடம் கொடேல்.

==ப==

* துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
* பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
* பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
* பக்கச் சொல் பதினாயிரம்.
* பசியுள்ளவன் ருசி அறியான்.
* பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
* பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
* பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
* பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
* படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
* படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
* படையிருந்தால் அரணில்லை.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
* பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
* பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
* பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
* பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
* பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
* பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
* பணம் உண்டானால் மணம் உண்டு.
* பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
* பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
* பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
* பதறாத காரியம் சிதறாது.
* பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
* பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
* பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
* பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
* பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
* பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
* பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
* பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
* பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
* பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
* பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
* பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
* பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
* பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
* பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
* பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
* பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

==பா==
* பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
* பாம்பின் கால் பாம்பறியும்.
* பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது
* பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!

==பு, பூ==
* புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி
* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
* புத்திமான் பலவான்.
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

==பெ, பே==
* பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
* பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
* பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
* பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்
* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
* பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
* பேசப் பேச மாசு அறும்.
* பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
* பேராசை பெருநட்டம்.
* பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

==பொ, போ==

* பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
* பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
* பொறுமை கடலினும் பெரிது.
* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.


==ம==
* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
* மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
* மண்டையுள்ள வரை சளி போகாது.
* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
* மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
* மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்
* மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
* மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
* மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
* மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
* மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
* மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
* மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
* மவுனம் கலக நாசம்
* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
* மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
* மனமுரண்டிற்கு மருந்தில்லை.
* மனம் உண்டானால் இடம் உண்டு.
* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
* மனம் போல வாழ்வு.
* மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
* மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

==மா==

* மாடம் இடிந்தால் கூடம்.
* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
* மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
* மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
* மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
* மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
* மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
* மாரடித்த கூலி மடி மேலே.
* மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
* மாரி யல்லது காரியம் இல்லை.
* மாவுக்குத் தக்க பணியாரம்.
* மாற்றானுக்கு இடங் கொடேல்.
* மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
* மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

==மு==
*முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
*முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)

==யா==
*யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).
*யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.
*யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
*யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
*யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?

==மி, மீ, மு, மூ==
  மின்னுவதெல்லாம் பொன்னல்ல
* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
* மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
* மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
* மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
* மீ தூண் விரும்பேல்.
* முகத்துக்கு முகம் கண்ணாடி
* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
* முதல் கோணல் முற்றுங் கோணல்
* முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
* முருங்கை பருத்தால் தூணாகுமா?
* முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
* முன் ஏர் போன வழிப் பின் ஏர்
* முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
* முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
* முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
* முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
* முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
* மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
* மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

==மெ, மே, மொ, மோ,மெள==

* மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
* மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
* மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
* மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
* மொழி தப்பினவன் வழி தப்பினவன்
* மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
* மெளனம் மலையைச் சாதிக்கும்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

==வ-வே==

* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
* வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
* வடக்கே கருத்தால் மழை வரும்.
* வட்டி ஆசை முதலுக்கு கேடு.
* வணங்கின முள் பிழைக்கும்.
* வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
* வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
* வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
* வருந்தினால் வாராதது இல்லை.
* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
* வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
* வளவனாயினும் அளவறிந் தளித்துண்
* வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
* வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
* வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
* வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
* வாழ்வும் தாழ்வும் சில காலம்.
* விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
* விரலுக்குத் தகுந்த வீக்கம்.
* விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
* விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விதி எப்படியோ மதி அப்படி.
* வித்தைக்கு அழிவில்லை.
* வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
* விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
* வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
* விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
* விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
* விளையும் பயிர் முளையிலே தெரியும்.
* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.