Difference between revisions 16030 and 16031 on tawikisourceஔவையார் விநாயகர் அகவல்
(பொருள் நோக்குச் சொற்பிரிப்பு)
<poem>
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து செறிப்ப
வேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
வேழ முகமும் விளங்கு சிதூரமும்
(contracted; show full)கணு முற்றி நின்ற கரும்புளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூட் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விழைகழல் சரணே. (72)
⏎
</poem>
This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|