Difference between revisions 17500 and 17501 on tawikisource

{{விக்கிப்பீடியா|விநாயகர் அகவல்}}
'''ஔவையார் விநாயகர் அகவல்'''

(பொருள் நோக்குச் சொற்பிரிப்பு)
<poem>
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குசப் பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதநின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன (15)

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து (20)
(contracted; show full)வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விரைகழல் சரணே. (72)
</poem>