Difference between revisions 10342 and 10351 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
(contracted; show full)
* மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
* மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை.
* மணலை கயிறாக திரிப்பது போல. ..
* மந்திரத்தால் மாங்காய் விழாது!
* மழை விட்டும் தூவானம் விடவில்லை!

==மா==

* மாதா பிதா செய்தது மக்களைக் காக்கும்.
:*<small>தாயும் தந்தையும் செய்த நற்செயல்களால் விளைந்த புண்ணியப் பலன்கள் அவர்களை மட்டுமல்லாது, அவர்கள் பெற்றப் பிள்ளைகளையும் காக்கும் என்பது பொருள்</small>
* மாடம் இடிந்தால் கூடம்.
* மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்காது!
* மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா?
* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
* மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
* மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
* மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி
* மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
* மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
* மாமியார் உடைத்தால் மண்கலம், மாட்டுப்பெண் உடைத்தால் பொன்கலம்!
* மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
* மாரடித்த கூலி மடி மேலே.
* மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
* மாரி யல்லது காரியம் இல்லை.
* மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்)
* மாற்றானுக்கு இடங் கொடேல்.
* மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!
* மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
* மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
* மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.


== மி==
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல
* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
* மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
* மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
* மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

==மீ==
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]