Difference between revisions 6275 and 6276 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல

* ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
** இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
* 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
** மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்
* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
* ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.