Difference between revisions 6279 and 6280 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடியாத மாடு படியாது.
* அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
** இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு
* அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
** குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.
* அரசு அன்று கொல்லும்,

  தெய்வம் நின்று கொல்லும்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
* அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
* அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
* அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
* அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
* அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
* அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
* அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்

, திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
* அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
* அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
* அழச் சொல்லுவார் தமர்,

  சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
* அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
* அழுத பிள்ளை பால் குடிக்கும்.
* அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

* அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.