Difference between revisions 6278 and 6279 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.


==ம==
* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
* மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
* மண் குதிர
்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?ையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
** இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு
* மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
** மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு.
* மண்டையுள்ள வரை சளி போகாது.
* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
* மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
* மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்
* மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
* மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.