Difference between revisions 6282 and 6283 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடியாத மாடு படியாது.
* அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

* அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
* அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
** இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
* அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
** அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
* அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
* அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
* அந்தி மழை அழுதாலும் விடாது.
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.