Difference between revisions 6569 and 6570 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* உளவு இல்லாமல் களவு இல்லை.
* உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
* உள்ளது போகாது இல்லது வாராது.
* உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
* உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
* உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம். 

* உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
* உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.

==ஊ==
* ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
* ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
* ஊண் அற்றபோது உடலற்றது.
* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
* ஊமை சொப்பனம் கண்டாற் போல..
* உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
* ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
* ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
* ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
* ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
* ஊசி முனையில் மூன்று குளம்.



==எ, ஏ==

* எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்! 
* எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
(contracted; show full)* வேலியே பயிரை மேய்ந்தாற் போல...
* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.
==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?