Difference between revisions 6570 and 6571 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். (contracted; show full)* ஆனைக்கும் அடிசறுக்கும். * ஆனை படுத்தால் ஆள் மட்டம். * ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. * ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு. * ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு. * ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம். * ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. * ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.⏎ * ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!! * ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். * ஆனை பசிக்கு சோளப் பொரி.⏎ * ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது. ==இ== * இக்கரைக்கு அக்கரை பச்சை. * இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். * இஞ்சி இலாபம் மஞ்சளில். * இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று. (contracted; show full)* ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். * ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும். * ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். * ஈர நாவிற்கு எலும்பில்லை. * ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான். * ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. ==உ , ஊ== * உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. * உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். * உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா * உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. * உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? * உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு. * உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. * உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் * உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். * உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும். * உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. * உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே. * உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். * உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும். * உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை * உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். * உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் * உப்பில்லா பண்டம் குப்பையிலே. * உப்பிட்டவரை உள்ள அளவும் நினை. * உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்! * உரம் ஏற்றி உழவு செய் * உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? * உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. * உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!⏎ * உலோபிக்கு இரட்டை செலவு. * உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. * உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. * உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும். * உளவு இல்லாமல் களவு இல்லை. * உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல * உள்ளது போகாது இல்லது வாராது. * உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. * உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன். * உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்] * உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம். * உளறுவாயனுக்கு ஊமையனே மேல். * உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும். ==ஊ== * ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும் * ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். * ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். * ஊண் அற்றபோது உடலற்றது. * ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. * ஊமை சொப்பனம் கண்டாற் போல.. * ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். * ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. * ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. * உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!⏎ * ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா? * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி * ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? * ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல். * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. * ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். * ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே. * ஊசி முனையில் மூன்று குளம். (contracted; show full) * காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும் * காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்! * காற்றில்லாமல் தூசி பறக்குமா? * காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். * காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். ⏎ ⏎ ==கி, கீ== * கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! * கிட்டாதாயின் வெட்டென மற * கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். * கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? * கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது. ==கீ==⏎ * கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி * கீர்த்தியால் பசி தீருமா? * கீறி ஆற்றினால் புண் ஆறும். ==கு== * குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? * குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. * குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். * குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். (contracted; show full)* கூடாநட்பு கேட்டில் முடியும். ==கெ== * கெடுக்கினும் கல்வி கேடுபடாது * கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது * கெடுவான் கேடு நினைப்பான் * கெட்டாலும் செட்டி செட்டியே, ⏎ ⏎ கிழிந்தாலும் பட்டு பட்டே. * கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். * கெட்டும் பட்டணம் சேர் * கெண்டையைப் போட்டு வராலை இழு. * கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். * கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. ==கே== * கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே. * கெடுவான் கேடு நினைப்பான். * கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே! * கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா? * கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை. * கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். * கேள்விப் பேச்சு மூளா நெருப்பு ⏎ ⏎ ==கை== ⏎ ⏎ * கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. * கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா * கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் * கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ** இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு * கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ** கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை * கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள் (contracted; show full)* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? * சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும். * சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்) * சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது. * சூடு மண்ட பூனை பாலை குடிக்காது. * சூதும் வாதும் வேதனை செய்யும். ==செ , சே, சை== * செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? * செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? * செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ? * செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும். * செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம். * செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம். * செயவன திருந்தச் செய். * செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும். * செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? * செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா? * செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம். * செல்லுமிடம் சினம் காக்க. * செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும். * சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. * செவிடன் காதில் சங்கு ஊதினால் போல! * செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும். * செய்யும் தொழிலே தெய்வம். * சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.⏎ ⏎ ==சே== * சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான். * சேலை கட்டிய மாதரை நம்பாதே ! * சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். * சேற்றிலே செந்தாமரை போல.⏎ ⏎ =சை== * சைகை அறியாதவன் சற்றும் அறியான். ==சொ, சோ== * சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? * சொல் அம்போ வில் அம்போ? * சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது. * சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். * சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. * சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை. * சொல்வல்லவனை வெல்லல் அரிது. * சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ். * சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம். * சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.⏎ ⏎ ==சோ== * சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா. * சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.. * சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம். ==த== ⏎ ⏎ * தங்கம் தரையிலே தவிடு பானையிலே. * தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. * தடி எடுத்தவன் தண்டல்காரனா ? * தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே. * தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ? * தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். * தணிந்த வில்லுத்தான் தைக்கும். * தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். * தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. * தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் . * தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. * தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை) * தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.) * தம்பி உடையான் படைக்கு அஞ்சான். * தருமம் தலைகாக்கும். * தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். * தலை இருக்க வால் ஆடலாமா ? * தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ? * தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? * தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். (contracted; show full)* நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. * நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும். * நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி. ==நி , நீ== * நித்தம் போனால் முத்தம் சலிக்கும். * நித்திய கண்டம் பூரண ஆயுசு. * நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு? * நித்திரை சுகம் அறியாது. * நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். * நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும். * நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.⏎ * நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.⏎ ⏎ ==நீ== * நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம். * நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது. * நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். * நீர் மேல் எழுத்து போல். * நீரானாலும் மோர், பேயானாலும் தாய். * நிறை குடம் தளும்பாது.⏎ * நீலிக்குக் கண்ணீர் இமையிலே. * நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.⏎ * நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும். ==நு, நூ, நெ, நே, நை, நொ, நோ== * நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? * நுணலும் தன் வாயால் கெடும். * நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. * நூல் கற்றவனே மேலவன். (contracted; show full)*முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். *முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? ==மோ== * மோரை பெருக்கு, நெய்யை உருக்கு. ==யா== * யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்). *யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை. யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? * யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். * யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. * யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?னைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல். * யானைப் பசிக்கு சோளப் பொரி * யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்). ==யோ== * யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.⏎ ==மி, மீ, மு, மூ== * மின்னுவதெல்லாம் பொன்னல்ல * மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. * மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ? * மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை. * மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். (contracted; show full) * மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை. * மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும். * மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் * மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். * மொழி தப்பினவன் வழி தப்பினவன் * மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். * மெளனம் மலையைச் சாதிக்கும். ⏎ * மின்னுவதெல்லாம் பொன்னல்ல. ==ர== *ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது. ==வ== * வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். * வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. * வடக்கே கருத்தால் மழை வரும். * வட்டி ஆசை முதலுக்கு கேடு. * வணங்கின முள் பிழைக்கும். * வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது! * வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா! * வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. * வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். * வருந்தினால் வாராதது இல்லை. * வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். * வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு * வல்லான் வகுத்ததே வாய்க்கால் * வளவனாயினும் அளவறிந் தளித்துண் * வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் போல..... * வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். * வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. * வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது * வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம். ⏎ ⏎ ==வா== * வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் * வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை. * வாயுள்ள பிள்ளை பிழைக்கும். * வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு. * வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். * வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான். * வாழ்வும் தாழ்வும் சில காலம். * வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும். * வாழையடி வாழையாக ......... ⏎ ⏎ ==வி== * விண் பொய்த்தால் மண் பொய்க்கும். * விரலுக்குத் தகுந்த வீக்கம். * விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு * விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. * விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம். * விதி எப்படியோ மதி அப்படி. * விதியை மதியால் வெல்லலாம். * வித்தைக்கு அழிவில்லை. * வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா? * விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா? * விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? * வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. * விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம் * விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? * விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது. * விளையும் பயிர் முளையிலே தெரியும். * வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் * விருந்தும் மருந்தும் மூன்று நாள். ==வீ== * வீட்டுக்கு வீடு மண் வாசற்படி * வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது. * வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது. ==வெ== * வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். * வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . * வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!! * வெளுத்ததெல்லாம் பாலல்ல. * வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான். * வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல.... ==வே== * வேலிக்கு ஓணான் சாட்சி. * வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு * வேலியே பயிரை மேய்ந்தாற் போல... * வேலை வரும்போதுதான் பேல வரும். * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. ⏎ ⏎ ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6571.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|