Difference between revisions 6701 and 6702 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.

* காகம் திட்டி மாடு சாகாது.
* காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்.
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.
* காகிதப்பூ மணக்காது.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..
* காரண குருவே காரிய குரு!
(contracted; show full)* சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
* சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன?

==சி==
* சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்
* சித்திரையில் செல்வ மழை.

* சிரைத்தாலும் தலையெழுத்து போகாது!
* சிறுதுளி பெரு வெள்ளம்.
* சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.
* சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ்.
* சித்தன் போக்கே சிவன் போக்கு.

==சு, சூ==

* சுக துக்கம் சுழல் சக்கரம்.
(contracted; show full)*தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
*தாயோடு அறுசுவை உணவு போம்.
*தாய்க்குப்பின் தாரம்.

==தி==
* திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை
* திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்)

* திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல....
* திருடனுக்கு தேள் கொட்டினாற் போல...
* திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல...
* தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்.
* தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!..

==து==
* துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
* துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை
(contracted; show full)* மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
* மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.

==மீ==
* மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?

==மு==

*முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?
*முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
*முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்
*முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)
*முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டாற் போல...
*முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!
*முயற்சி திருவினையாக்கும்.
*முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
*முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.