Difference between revisions 6700 and 6701 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.

* காகிதப்பூ மணக்காது.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..
* காரண குருவே காரிய குரு!
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
(contracted; show full)* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
* நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
* நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
* நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
* நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
* நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
* நயத்திலாகிறது பயத்திலாகாது.

* நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும்.
* நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
* நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
* நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
* நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
* நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
* நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
* நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
* நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
(contracted; show full)* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
* நுணலும் தன் வாயால் கெடும்.
* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
* நூல் கற்றவனே மேலவன்.
* நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
* நூற்றைக் கொடுத்தது குறுணி.
* நெய் முந்தியோ திரி முந்தியோ.

* நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு.
* நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
* நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
* நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
* நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
* நேற்று உள்ளார் இன்று இல்லை.
* நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
* நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
* நொறுங்கத் தின்றால் நூறு வயது.
(contracted; show full)* பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
* பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
* பண்டிதன் மகன் பரம சூனியம்.
* பண்டம் ஒரிடம் பழி பத்திடம்.
* பதறாத காரியம் சிதறாது.
* பதறிய காரியம் சிதறும் (Haste is waste)

* பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
* பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
* பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி
* பல்லு போனா சொல்லு போச்சு.
* பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
* பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
(contracted; show full)* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
* வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
* வளவனாயினும் அளவறிந் தளித்துண்
* வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் போல.....
* வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
* வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
* வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.

* வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)

==வா==
* வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
* வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை.
* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
* வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
* வாழ்வும் தாழ்வும் சில காலம்.
* வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்.
* வாழையடி வாழையாக .........
* வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது   

==வி==
* விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
* விரலுக்குத் தகுந்த வீக்கம்.
* விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
* விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்.
* விதி எப்படியோ மதி அப்படி.
* விதியை மதியால் வெல்லலாம்.
* வித்தைக்கு அழிவில்லை.
* வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
* விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
* வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
* விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
* விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
* விளையும் பயிர் முளையிலே தெரியும்.
* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
* விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

==வீ==
* வீட்டுக்கு வீடு மண் வாசற்படி
* வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது.
* வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது.

==வெ==
* வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல....
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான்.
* வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல....

==வே==
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேலியே பயிரை மேய்ந்தாற் போல...
* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?