Difference between revisions 6283 and 6284 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். * அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு. * அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். * அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. * அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். * அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது * அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? * அடக்கமே பெண்ணுக்கு அழகு. * அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். * அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. * அடாது செய்தவன் படாது படுவான். * அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார் * அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். * அடியாத மாடு படியாது. * அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். * அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். * அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும். * அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. * அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. * அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் ** இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு * அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் ** அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள். * அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். * அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. * அந்தி மழை அழுதாலும் விடாது. * அப்பன் அருமை மாண்டால் தெரியும். * அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. * அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். * அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம். * அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. * அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். * அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. ** இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு * அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல ** குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து. * அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். * அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். * அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. * அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. * அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். * அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம். * அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும். * அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது? * அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம். * அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும். * அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு. * அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது. * அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார். * அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள். * அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை. * அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. * அவனவன் செய்த வினை அவனவனுக்கு. * அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா? * அழக் கொண்ட எல்லாம் அழப் போகும். * அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும். * அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர். * அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? * அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன். * அழுத பிள்ளை பால் குடிக்கும். * அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். * அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை. * அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும். * அளக்கிற நாழி அகவிலை அறியுமா? * அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. * அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது. * அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். * அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி * அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன. * அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை. * அறச் செட்டு முழு நட்டம். * அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். * அறமுறுக்கினால் அற்றுப் போகும். * அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். * அறிய அறியக் கெடுவார் உண்டா? * அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். * அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். * அறிவீனனிடம் புத்தி கேட்காதே. * அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. * அறிவுடையாரை அரசனும் விரும்புவான். * அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம். * அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். * அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. * அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்? * அற்ப அறிவு அல்லலுக்கு இடம். * அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். * அற்ப சகவாசம் பிராண சங்கடம். * அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். * அற்றது பற்றெனில் உற்றது வீடு. * அன்பான நண்பனை ஆபத்தில் அறி. * அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். * அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? * அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம். * அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான். * அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். * அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? ==ஆ== * ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். * ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும். * ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். * ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க! * ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு! * ஆசை வெட்கம் அறியாது. * ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம். * ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். * ஆடிப் பட்டம் தேடி விதை. * ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும். * ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். * ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம். * ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம். * ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது. * ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல. * ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம் ** இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு. * ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம் ** ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள். * ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. * ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா * ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும். * ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல * ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் ** இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு. * ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் ** மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள் * ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே * ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்! * ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. * ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். * ஆரால் கேடு, வாயால் கேடு. * ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. * ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. * ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. * ஆழமறியாமல் காலை இடாதே. * ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். * ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். * ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. * ஆழம் தெரியாமல் காலை விடாதே. * ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. * ஆறின கஞ்சி பழங் கஞ்சி. * ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? * ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. * ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ். * ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. * ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. * ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். * ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். * ஆனைக்கும் அடிசறுக்கும். * ஆனை படுத்தால் ஆள் மட்டம். * ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ==இ, ஈ== * இக்கரைக்கு அக்கரை பச்சை. * இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். * இஞ்சி இலாபம் மஞ்சளில். * இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். * இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு. * இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை. * இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர். * இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. * இரக்கப் போனாலும் சிறக்கப் போ. * இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி. * இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. * இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே. * இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை * இராச திசையில் கெட்டவணுமில்லை * இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான். * இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா. * இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான். * இருவர் நட்பு ஒருவர் பொறை. * இல்லாது பிறாவது அள்ளாது குறையாது. * இல்லது வாராது; உள்ளது போகாது. * இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா? * இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. * இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான். * இளங்கன்று பயமறியாது * இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து. * இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். * இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல. * இறங்கு பொழுதில் மருந்து குடி. * இறுகினால் களி , இளகினால் கூழ். * இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். * இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும். * இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே * இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா? * ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். * ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும். * ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். * ஈர நாவிற்கு எலும்பில்லை. * ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான். ==உ, ஊ== * உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. * உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். * உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா * உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. * உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? * உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு. * உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. * உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். * உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. * உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். * உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும். * உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை * உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். * உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் * உரம் ஏற்றி உழவு செய் * உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? * உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. * உலோபிக்கு இரட்டை செலவு. * உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. * உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. * உளவு இல்லாமல் களவு இல்லை. * உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல * உள்ளது போகாது இல்லது வாராது. * உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. * உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன். * உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்] * ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும் * ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். * ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். * ஊண் அற்றபோது உடலற்றது. * ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. * ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். * ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. * ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. * ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா? * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி * ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல். ==எ, ஏ== * எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ? * எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. * எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? * எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. * எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்! * எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது. * எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன? * எண் இல்லாதவர் கண் இல்லாதவர், * எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது! * எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். * எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். * எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. * எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை. * எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ? * எதார்த்தவாதி வெகுசன விரோதி. * எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். * எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும். * எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? * எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். * எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா * எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? * எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். * எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. * எருது நோய் காக்கைக்கு தெரியுமா? * எலி அழுதால் பூனை விடுமா? * எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். * எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் * எலி வளை யானாலும் தனி வலை வேண்டும். * எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? * எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது * எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்? * எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்! * எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்! * எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? * எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான் * எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம். * எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி. * எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி. * எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் * எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான். * எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு. * எறும்பு ஊரக் கல்லுந் தேயும். * எறும்புந் தன் கையால் எண் சாண் * ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை * ஏரி நிறைந்தால் கரை கசியும். * ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். * ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். * ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை * ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும். * ஏழை என்றால் எவர்க்கும் எளிது * ஏழைபேச்சு அம்பலம் ஏறாது * ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம் * ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். ==ஐ, ஒ, ஓ, ஒள== * ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. * ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? * ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும். * ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது * ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா? * ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம். * ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். * ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? * ஒரு காசு பேணின் இரு காசு தேறும் * ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை * ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? * ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா? * ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை * ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா? * ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். * ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல் * ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல். * ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும். * ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். * ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை. * ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று. * ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா! * ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம். * ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம் * ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி. * ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு. * ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்! * ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி. * ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும் *ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது! * ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். * ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே. * ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி. * ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு. * ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. ==க== * கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா? * கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. * கடலுக்குக் கரை போடுவார் உண்டா? * கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. * கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? * கடல் திடலாகும், திடல் கடலாகும். * கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? * கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு! * கடவுளை நம்பினோர் கைவிடப் படார். * கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. * கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான். * கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி. * கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை. * கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். * கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? * கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது. * கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான். * கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும். * கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும். * கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான். * கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல. * கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது. * கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள். * கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும். * கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு. * கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை. * கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான். * கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும். * கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். * கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை! * கண் கண்டது கை செய்யும். * கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா? * கண்டதே காட்சி கொண்டதே கோலம். * கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. * கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு. * கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? * கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா? * கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது. * கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு. * கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள். * கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். * கதிரவன் சிலரை காயேன் என்குமோ? * கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே * கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும். * கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி. * கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு. * கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக. * கரணம் தப்பினால் மரணம். * கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா? * கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். * கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் * கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று. * கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்? * கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். * கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி! * கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி. * கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே. * கல்லாதவரே கண்ணில்லாதவர். * கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம். * கல்வி அழகே அழகு. * கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு. * கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர். * கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது. * கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல. * களவும் கற்று மர ** இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி * களவும் கத்தும் மற ** களவையும் சூதாட்டத்தையும் மற * களை பிடுங்காப் பயிர் காற்பயிர். * கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல். * கள்ள மனம் துள்ளும். * கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம். * கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! * கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்! * கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான். * கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது. * கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. * கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. * கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்? * கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? * கனிந்த பழம் தானே விழும். * கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. * கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ. ==கா== * காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும். * காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். * காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும். * காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? * காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? * காணி ஆசை கோடி கேடு. * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் * காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. * காப்பு சொல்லும் கை மெலிவை. * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். * காய்த்த மரம் கல் அடிபடும். * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது. * காரண குருவே காரிய குரு! * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. * காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை * காலம் செய்கிறது ஞாலம் செய்யாது. * காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும் * காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்! * காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. * காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும். * காலைக் கல்; மாலைப் புல் **"காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (<small>'''[http://dinamani.com காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012]'''</small>) * காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும் * காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்! * காற்றில்லாமல் தூசி பறக்குமா? * காற்று உள்ளபோதே தூற்றிக்கொள். * காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும். ==கி, கீ== * கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! * கிட்டாதாயின் வெட்டென மற * கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான். * கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? * கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி * கீர்த்தியால் பசி தீருமா? * கீறி ஆற்றினால் புண் ஆறும். ==கி, கீ, கு, கூ== * குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? * குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. * குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். * குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். * குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? * குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது. * குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும். * குணத்தை மாற்றக் குருவில்லை. * குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை. * குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று. * குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள். * குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. * குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. * குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும். * குப்பை உயரும் கோபுரம் தாழும். * குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? * கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு. * குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது. * குரங்கின் கைப் பூமாலை. * குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. * குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம் * குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை. * குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? * குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். * குருவிக்கேத்த ராமேஸ்வரம் ** இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு * குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? * குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது. * பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே * குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. * குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. * குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல * குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. * குறி வைக்க ஏற்ற ராம சரம் * குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. * குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும் * குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. * கூடி வாழ்ந்தால் கோடி நன்மை * கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான். * கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம். * கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? * கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம். * கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. * கூழும் சிந்தல, கோப்பையும் உடையல ==கெ== * கெடுக்கினும் கல்வி கேடுபடாது * கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது * கெடுவான் கேடு நினைப்பான் * கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே. * கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். * கெட்டும் பட்டணம் சேர் * கெண்டையைப் போட்டு வராலை இழு. * கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். * கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. ==கே== * கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே. * கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே! * கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா? * கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை. * கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். * கேள்விப் பேச்சு மூளா நெருப்பு ==கை== * கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. * கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா * கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் * கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ** இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு * கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ** கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை⏎ * கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள் * கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும் * கையிலே காசு வாயிலே தோசை * கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். * கையூன்றிக் கரணம் போடவேண்டும். * கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம் ==கொ== * கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? * கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம் * கொடிக்கு காய் கனமா? * கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். * கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. * கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை. * கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? * கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு. * கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான். * கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா? * கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? * கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது. * கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் . * கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன். ==கோ== * கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை. * கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. * கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம் * கோடி வித்தையும் கூழுக்குத்தான் * கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது. * கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. * கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. * கோபம் சண்டாளம். * கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்! * கோபுர தரிசனம் கோடி புண்ணியம் * கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா? * கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? * கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? * கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் * கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும். * கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும். * கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது ==ச, சா, சி, சீ== * சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்! * சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி * சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். * சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? * சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன். * சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா * சர்க்கரை என்றால் தித்திக்குமா? * சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால். * சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்? * சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். * சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். * சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன். * சாண் ஏற முழம் சறுக்கிறது. * சாது மிரண்டால் காடு கொள்ளாது. * சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம். * சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார். * சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. * சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம் * சித்திரையில் செல்வ மழை. * சிறுதுளி பெரு வெள்ளம். ==சு, சூ== * சுக துக்கம் சுழல் சக்கரம். * சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். * சுட்ட சட்டி அறியுமா சுவை. * சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? * சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம். * சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும். * சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு. * சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே * சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. * சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. * சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா? * சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும். * சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான். * சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது. ==செ, சே, சை== * செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.? * செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? * செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ? * செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும். * செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம். * செயவன திருந்தச் செய். * செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும். * செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? * செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம். * செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும். * சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. * சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். * சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான். * சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். * சேற்றிலே செந்தாமரை போல. * சைகை அறியாதவன் சற்றும் அறியான். ==சொ, சோ== * சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா? * சொல் அம்போ வில் அம்போ? * சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது. * சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். * சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. * சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை. * சொல்வல்லவனை வெல்லல் அரிது. * சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ். * சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம். * சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. * சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா. * சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.. * சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம். ==த== * தங்கம் தரையிலே தவிடு பானையிலே. * தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. * தடி எடுத்தவன் தண்டல்காரனா ? * தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே. * தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். * தணிந்த வில்லுத்தான் தைக்கும். * தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். * தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. * தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் . * தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. * தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை) *தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.) * தம்பி உடையான் படைக்கு அஞ்சான். * தருமம் தலைகாக்கும். * தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். * தலை இருக்க வால் ஆடலாமா ? * தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ? * தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? * தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். * தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர். * தவளை தன் வாயாற் கெடும். * தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும் * தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்! ==தா== *தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி! *தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் *தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று *தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை) *தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் *தானத்தில் சிறந்தது நிதானம் *தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய் ==தி== * திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை ==து== * துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ? * துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை ==தை== * தை பிறந்தால் வழி பிறக்கும் * தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும் ==ந== * நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான். * நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி. * நடந்தவன் காலிலே சீதேவி இருந்தவன் காலிலே மூதேவி * நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை. * நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா ! * நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. * நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும் * நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். * நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். * நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? * நயத்திலாகிறது பயத்திலாகாது. * நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். * நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். * நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. * நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும். * நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. * நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ? * நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். * நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். * நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம். ==நா== * நா அசைய நாடு அசையும். * நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். * நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ? * நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும். * நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம். * நாய் இருக்கிற சண்டை உண்டு. * நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை. * நாய் விற்ற காசு குரைக்குமா? * நாலாறு கூடினால் பாலாறு. * நாள் செய்வது நல்லார் செய்யார். * நாற்பது வயதுக்குமேல் நாய் குணம். ==நி, நீ== * நித்தம் போனால் முத்தம் சலிக்கும். * நித்திய கண்டம் பூரண ஆயிசு. * நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு? * நித்திரை சுகம் அறியாது. * நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். * நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும். * நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர். * நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம். * நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது. * நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். * நீர் மேல் எழுத்து போல். * நீலிக்குக் கண்ணீர் இமையிலே. * நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும். ==நு, நூ, நெ, நே, நை, நொ, நோ== * நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? * நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. * நூல் கற்றவனே மேலவன். * நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. * நூற்றைக் கொடுத்தது குறுணி. * நெய் முந்தியோ திரி முந்தியோ. * நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? * நெருப்பு என்றால் வாய்வெந்து போமா? * நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ? * நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். * நேற்று உள்ளார் இன்று இல்லை. * நைடதம் புலவர்க்கு ஒளடதம். * நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. * நொறுங்கத் தின்றால் நூறு வயது. * நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம். * நோய் கொண்டார் பேய் கொண்டார். * நோய்க்கு இடம் கொடேல். ==ப== * துணியாதே , படபடப்பாகச் செய்யாதே. * பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. * பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு. * பக்கச் சொல் பதினாயிரம். * பசியுள்ளவன் ருசி அறியான். * பசி வந்திடில் பத்தும் பறந்துபோம் * பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை. * பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? * பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? * படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். * படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். * படையிருந்தால் அரணில்லை. * படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். * பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். * பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு! * பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். * பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். * பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். * பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். * பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? * பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும். * பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர். * பணம் உண்டானால் மணம் உண்டு. * பணம் பந்தியிலே குலம் குப்பையிலே. * பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும் * பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். * பதறாத காரியம் சிதறாது. * பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. * பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. * பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். * பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். * பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். * பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். * பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை. * பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. * பழகப் பழகப் பாலும் புளிக்கும். * பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். * பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம். * பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? * பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது. * பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. * பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? * பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை. * பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ? * பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர். * பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே * பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும். * பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி. ==பா== * பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு . * பாம்பின் கால் பாம்பறியும். * பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது * பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்! ==பு, பூ== * புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி * புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. * புத்திமான் பலவான். * புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா? * புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். * பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது * பூமியைப்போலப் பொறுமை வேண்டும். * பூவிற்றகாசு மணக்குமா? * பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம். ==பெ, பே== * பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது * பெண் என்றால் பேயும் இரங்கும். * பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. * பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். * பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான். * பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி. * பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன் * பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும். * பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை! * பெருமையும் சிறுமையும் வாயால் வரும். * பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. * பேசப் பேச மாசு அறும். * பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை. * பேராசை பெருநட்டம். * பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ் ==பொ, போ== * பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய். * பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை. * பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது. * பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார். * பொறி வென்றவனே அறிவின் குருவாம். * பொறுமை கடலினும் பெரிது. * பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும். * பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. * போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. * போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா? * போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன். ==ம== * மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும். * மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். * மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. * மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? ** இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு * மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா? ** மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு. * மண்டையுள்ள வரை சளி போகாது. * மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். * மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. * மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா? * மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம் * மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். * மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான். * மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். * மருந்தும் விருந்தும் மூன்று வேளை. * மருந்தே யாயினும் விருந்தோடு உண். * மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும். * மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் . * மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? * மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர் * மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும். * மவுனம் கலக நாசம் * மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். * மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. * மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. * மனமுரண்டிற்கு மருந்தில்லை. * மனம் உண்டானால் இடம் உண்டு. * மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. * மனம் போல வாழ்வு. * மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி. * மண்னுயிரை தன்னுயிர்போல் நினை. ==மா== * மாடம் இடிந்தால் கூடம். * மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? * மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா? * மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது. * மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும். * மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். * மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். * மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். * மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. * மாரடித்த கூலி மடி மேலே. * மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி. * மாரி யல்லது காரியம் இல்லை. * மாவுக்குத் தக்க பணியாரம். * மாற்றானுக்கு இடங் கொடேல். * மானம் பெரிதோ? உயிர் பெரிதோ? * மானைக் காட்டி மானைப் பிடிப்பார். ==மு== *முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.) *முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.) ==யா== *யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்). *யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை. *யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். *யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. *யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? ==மி, மீ, மு, மூ== மின்னுவதெல்லாம் பொன்னல்ல * மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது. * மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ? * மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை. * மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. * மீ தூண் விரும்பேல். * முகத்துக்கு முகம் கண்ணாடி * முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? * முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். * முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா * முதல் கோணல் முற்றுங் கோணல் * முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார். * முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. * முருங்கை பருத்தால் தூணாகுமா? * முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும். * முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். * முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது? * முன் ஏர் போன வழிப் பின் ஏர் * முன்கை நீண்டால் முழங்கை நீளும். * முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? * முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? * முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன் * முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு * மூட கூட்டுறவு முழுதும் அபாயம். * மூத்தோர் சொல் வார்த்தை அமுதம். * மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும். ==மெ, மே, மொ, மோ,மெள== * மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை. * மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும். * மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் * மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். * மொழி தப்பினவன் வழி தப்பினவன் * மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். * மெளனம் மலையைச் சாதிக்கும். * மின்னுவதெல்லாம் பொன்னல்ல. ==வ-வே== * வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். * வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. * வடக்கே கருத்தால் மழை வரும். * வட்டி ஆசை முதலுக்கு கேடு. * வணங்கின முள் பிழைக்கும். * வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது! * வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா! * வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. * வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். * வருந்தினால் வாராதது இல்லை. * வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். * வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு * வல்லான் வகுத்ததே வாய்க்கால் * வளவனாயினும் அளவறிந் தளித்துண் * வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். * வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. * வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது * வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் * வாயுள்ள பிள்ளை பிழைக்கும். * வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு. * வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். * வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான். * வாழ்வும் தாழ்வும் சில காலம். * விண் பொய்த்தால் மண் பொய்க்கும். * விரலுக்குத் தகுந்த வீக்கம். * விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு * விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. * விதி எப்படியோ மதி அப்படி. * வித்தைக்கு அழிவில்லை. * வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா? * விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா? * விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? * வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. * விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம் * விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? * விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது. * விளையும் பயிர் முளையிலே தெரியும். * வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் * வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். * வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . * வெளுத்ததெல்லாம் பாலல்ல. * வேலிக்கு ஓணான் சாட்சி. * வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6284.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|